;
Athirady Tamil News

இங்கிலாந்து மன்னராக மே 6-ம் தேதி முடிசூட தயாராகும் சார்லசுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பு..!!!

0

இங்கிலாந்தின் மன்னராக முடிசூட தயாராகும் சார்லசுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட உள்ள நிலையில் அந்நாட்டின் லிவர்பூல் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் நீங்கள் என்னுடைய மன்னர் அல்ல என்று முழக்கமிட்டனர். இதனால் மன்னர் சார்லஸ் அதிர்ச்சி அடைந்தார்.

மே 6-ம் தேதி இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் முடிசூடப்பட உள்ளார். 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் பூண்டு வருகிறது. முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவரது அரியணையை ஏற்காத பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சார்லஸ் மீது முட்டை வீச்சு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.