;
Athirady Tamil News

தெஹிவளையில் ஒருவர் கொலை;14 பேர் கைது!!

0

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் ஒருவரைத் தாக்கியதுடன் இன்னொருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் கிடைத்த தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த 27 வயது நபர் படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 14 சந்தேக நபர்கள் தெஹிவளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 தொடக்கம் 33 வயதுக்குட்பட்ட கிண்ணியா, நிலாவெளி, அவிசாவளை, களுத்துறை, பண்டாரகம, காலி, பேருவளை, கந்தளாய், ஹட்டன் மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவராவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.