;
Athirady Tamil News

அரசு பொதுத்தேர்வுகளில் அசத்திய திருப்பூர் மாவட்ட பள்ளிகள்!!

0

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 93 தோ்வு மையங்களில் 217 பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்து 999 மாணவா்கள், 13 ஆயிரத்து 233 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 232 போ் தோ்வு எழுதினா். இந்த தோ்வு முடிவு நேற்று வெளியாகியது. இதில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 10 ஆயிரத்து 441 மாணவா்கள், 12 ஆயிரத்து 915 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 356 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 94.93 சதவீதம் , மாணவிகள் 97.60 சதவீதம் என மொத்தம் 96.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 4.21 சதவீதம் அதிகமாகும். தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூா் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 1 பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் கடந்த 2022 ம் ஆண்டில் 92.17 சதவீதத்துடன் மாநில அளவில் 11-வது இடத்தை பிடித்திருந்த நிலையில் நிகழாண்டு 96.38 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.திருப்பூா் மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 5 சுயநிதிப் பள்ளிகள், 72 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 90 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. 10-ம்வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 11-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 18 இடங்கள் முன்னேறி 11-வது இடம் பெற்றுள்ளது.பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தது.

அரசு பள்ளிகள் அளவில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்ட பள்ளிகள் சாதனை படைத்துள்ளது திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10-ம்வகுப்பு தேர்வில் 11-ம் இடத்தை பிடித்துள்ளது ஆறுதலை அளித்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் திருப்பூர் மாவட்ட பள்ளிகள் சாதனை படைத்தது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வை பொறுத்தவரை, மாவட்ட கலெக்டர் வினீத்தின் தொடர் கண்காணிப்பும், அவ்வப்போது கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டத்தில் அவர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களும் பலன் தந்திருக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த திருவளர்ச்செல்வி தொடர்ந்து பள்ளிகள் தோறும் ‘விசிட்’ செய்து நிறை குறைகளை கேட்டறிந்தார்.

மாணவ, மாணவிகளுக்கு தினமும் 25 மதிப்பெண்ணுக்கு ‘யூனிட் டெஸ்ட்’ என்ற பெயரில் வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை முந்தைய நாளே மாணவ, மாணவிகளிடம் தெரியப்படுத்தி அதை படிக்க வைத்து மறுநாள் தேர்வு வைக்கப்பட்டது. இதில் இலகுவான கேள்வி முதற்கொண்டு கடினமான கேள்விகள் கூட கேட்கப்பட்டன. இதன் வாயிலாக அனைத்து பாடங்களையும் படிக்கும் சூழல் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டது.

அதே நேரம் குறிப்பிட்ட பாடம் கற்பதில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற வைக்கும் பொறுப்பு, அந்த பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் உட்பட நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் முழு கவனமும், கல்வி போதிப்பின் மீது மட்டுமே இருக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.மாநில அளவிலும் சாதனை படைக்க முடிந்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:- திருப்பூரை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்பது தொடர்ந்து சிறப்பான வகையில் தான் இருந்து வருகிறது.

மாவட்ட கலெக்டர், துறை அதிகாரிகள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சி தான் இதற்கு காரணம். இம்மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான தனியார் நிறுவனங்கள், அரசுப்பள்ளிகளின் வளர்ச்சி, கட்டமைப்புக்கு உதவி புரிவது பாராட்டுக்குரியது. கழிப்பறை, வகுப்பறை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி குறைபாடுள்ள பள்ளிகளில் அவற்றை ஏற்படுத்தி கொடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படும். வரும் ஆண்டிலும் கல்வித்தரம், தேர்ச்சி விகிதத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.