;
Athirady Tamil News

10 கண் வில்லைகளைத் திருடியவர் சிக்கினார்!!

0

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சத்திர சிகிச்சை அறையிலிருந்த 10 கண் வில்லைகளைத் (கென்டாக்ட் லென்ஸ்கள்) திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறை உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரென கொம்பஞ்ஞ வீதி பொலிஸார் தெரிவித்தனர்.

திருடியதாகக் கூறப்படும் அந்த 10 கண் வில்லைகளின் பெறுமதி 369,000 ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.