;
Athirady Tamil News

பதவியாவில் கஞ்சா மீட்பு!!

0

பதவியா பகுதியில் உள்ள கடையொன்றுள்ள மறைத்து வைத்து விற்கப்பட்ட கஞ்சா பொதி இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்னுள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள 51வது இராணுவ தலைமையக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடுத்து குறித்த பொதி கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடையினுளிருந்து 4.5 கிலோகிராமுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்த இருவர் பதவியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.