;
Athirady Tamil News

6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

0

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார். ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 வரை தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் செய்கிறார். சுரினாமில் இருந்து அவர் ஜூன் 7 முதல் 9 வரை தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஐரோப்பாவில் உள்ள செர்பியாவுக்குச் செல்கிறார். சுரினாம் அதிபர் சான் சந்தோகி அழைப்பின் பேரில் ஜூன் 4 முதல் 6 வரை ஜனாதிபதி சுரினாமில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

சுரினாமுக்கு இந்தியர்கள் வருகை தந்ததன் 150-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்வதால் இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.