;
Athirady Tamil News

பிரான்சில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுடன் நடத்தப்பட்ட தமிழ் மொழி பரீட்சை!

0

பிரான்சில் கல்வி மேம்பாட்டு பேரவை மற்றும் தமிழ் சோலை அமைப்பு இணைந்து நடத்திய தமிழ் மொழிபரீட்சை நேற்று ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுடன் நடத்தப்பட்டிருந்தது.

இதில் வெளிமாகாணத்தில் இயங்கும் 11 தமிழ்ச்சோலைகள் உட்பட 70 தமிழ்ச்சோலைகளுடன் 5 தனியார் பாடசாலைகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 5062 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

சிறப்பு மண்டபங்களில் திறமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தப் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் வெகு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றிருந்தைமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.