;
Athirady Tamil News

குளச்சல் கடலில் பலத்த சூறைக்காற்று- கட்டு மரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

0

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் 61 நாட்களுக்கு மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் பகுதி விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகினர் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது. இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் பெரும்பான்மையான கட்டுமரங்கள், வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைவான நெத்திலி மீன்களே கிடைத்தன. மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் பாதுகாப்பாக மேடான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் காற்று காரணமாக கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லாததால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.