;
Athirady Tamil News

மர்ம மரத்தால் உருவான பார்வையற்றோர் கிராமம் !!

0

கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாத நிலையில் உள்ள மர்மமான கிராமத்தை பற்றி அறிந்துள்ளீர்களா?

அதாவது, மெக்சிக்கோவில் டில்டெபாக் என்ற கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இக்கிராமத்தில் உள்ள மனிதர்கள் முதல் அங்கு காணப்படும் விலங்குகள் வரையில் அனைத்துமே பார்வையற்ற நிலையில் காணப்படுவதனால் இதனை பார்வையற்றோர் கிராமம் என அழைக்கின்றனர்.

இக்கிராமத்தில், ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் கண்கள் நன்றாக இருக்கும். ஆனால், படிப்படியாக கண்கள் பார்வையற்றதாக மாறிவிடும் நிலை காணப்படுகிறது.

இதற்கான காரணமாக அம்மக்கள் அக்கிராமத்தில் காணப்படும் சபிக்கப்பட்ட மரத்தையே சுட்டிக்காட்டுகின்றனர்.

அதாவது, லாவாசுலேவா என்ற மரத்தை அந்தக் கிராமத்திலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் பார்க்கும்போது அனைவரும் பார்வையற்றவர்களாக மாறிவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதுதொடர்பில் நிபுணர்கள், இந்தக் கிராமத்மதில் விஷ ஈக்கள் காணப்படுவதாகவும் அந்த ஈக்கள் கடிப்பதனால் அவர்கள் பார்வையற்றவர்களாக மாறிவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அறிந்துகொண்ட மெக்சிக்கோ அரசு கிராம மக்களுக்கு உதவ முன்வந்தாலும் அது பலனளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.