;
Athirady Tamil News

ஒரே நாளில் 92,238 பேர் திருப்பதியில் தரிசனம்!!

0

திருப்பதி ஏழுமலையானை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 92,238 பேர் தரிசித்துள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

கடந்த 4 ஆண்டு காலத்தில் ஒரே நாளில் இவ்வளவு பக்தர்கள் சுவாமியை தரிசித்ததில்லை என்று கூறப்படுகிறது. கோயிலுக்குள் உள்ள வெள்ளி வாசலில் இருந்து பக்தர்களை தங்க வாசல் வழியாக ஒற்றை வரிசையில் அனுப்பியதால்தான் இவ்வளவு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடிந்துள்ளது.

இதில், சர்வ தரிசனத்தில் சென்றவர்கள் மட்டுமே 70 ஆயிரம் பக்தர்கள் ஆவர். 40,400 பேர் தலைமுடி காணிக்கையும் ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கையும் செலுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.