;
Athirady Tamil News

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி!! (PHOTOS)

0

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது அதன் ஊடாக தயாரிக்கப்பட்ட உணவுகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.

சிறு தாணியஉணவினை வழங்கி தானியங்களை விற்பனை செய்து அவற்றின் ஊடாக ஏற்படும் போஷாக்கு நிலைமைகள் தொடர்பாகவும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர்
பி.எஸ்.எம்.சாள்ஸ்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன,
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.