;
Athirady Tamil News

இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்ஐஏ விசாரணை!!

0

அமெரிக்கா, கனடாவில் இந்திய தூதரங்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளரான பஞ்சாப் மத போதகர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வெளிநாடுகளில் இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இங்கிலாந்தின் லண்டனிலும், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மற்றும் கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரங்களில் தாக்குதல் நடத்தினர். லண்டன் தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவில் நடந்த தாக்குதலையும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு நேற்று ஏற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.