தேங்காய் எண்ணெய்க்கு செயற்கைத் தட்டுப்பாடு !!
பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் உள்ளுர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்க வழி வகுத்துள்ளதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
தற்போது உள்நாட்டு சந்தைகளில் ஒரு தேங்காயின் விலை ரூ.120 மற்றும் ரூ.130 என அதிக விலைக்கு விற்கப்படுவதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களால் சந்தையில் தேங்காயின் விலை அதிகரிக்கிறது. தேங்காய் விலையுயர்ந்தாலும், செயல்திறன் மிக்க விநியோகத்தால் தேங்காய் எண்ணெய் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறது. விநியோகத்தைத் தடை செய்து செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்துவதன் மூலம் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.