;
Athirady Tamil News

டெல்லியில் 2 பெண்கள் சுட்டுக்கொலை பணத்தகராறில் சகோதரருக்கு வைத்த குறியில் பலியான பரிதாபம்!!

0

டெல்லி ஆர்.கே.புரம் அருகே அம்பேத்கார் பஸ்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிங்கி (வயது 30), ஜோதி(29). இன்று அதிகாலையில் மர்ம மனிதர்கள் அவர்களது வீட்டுக்கு சென்றனர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரிகள் இருவரையும் அருகே உள்ள எஸ்.ஜே.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 பெண்களின் சகோதரருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் தான் அந்த பெண்களின் சகோதரருக்கு வைத்த குறியில் சகோதரிகள் இருவரும் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்பது முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை கமிஷனர் மனோஜ் கூறியதாவது:- பலியான பெண்களின் சகோதரரிடம் இருந்து அதிகாலை 4.40 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு சென்றது. 2 பெண்கள் சுடப்பட்டு இருந்தனர்.

மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். கொலையாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சகோதரரை பின் தொடர்ந்து உள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பணத் தகராறு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. நாங்கள் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். தலைநகர் டெல்லியில் அதிகாலையில் 2 பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.