;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மலை பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 13 பேர் பலி!!

0

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சால்ட் மலையில் சென்றபோது பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தில், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், பிரேக் செயலிழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.