;
Athirady Tamil News

“விரைவில் கடன்மறுசீரமைப்பை பூர்த்திசெய்ய வேண்டும்”!!

0

இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் விரைவில் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்யவேண்டும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கை குறித்த சர்வதேச மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளித்துள்ளதாக கூறிய அவர், இலங்கையில் சீர்திருத்தம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.