;
Athirady Tamil News

சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்…! உக்ரைனின் பகிரங்க செய்தி !!

0

ரஷ்யாவில் உள்ள தனியார் இராணுவமான வாக்னர் படை இப்போது அந்நாட்டின் இராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளது.

இந்தச் செய்தி அறிந்த உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய நாட்டிற்கான தனியார் இராணுவ படை போரிட்டு வந்தது.

இந்நிலையில் ரஷ்ய இராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தற்போது ரஷ்யாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம். இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்சினை ரஷ.யாவிற்கு ஏற்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுவொருபுறமிருக்க, வாக்னர் வாடகை இராணுவக் குழு மொஸ்கோவை நோக்கி நகர்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் தலைவர் பிரிகோஜின் அனைத்து நகரங்களிலும் தாக்குதலை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த நகர்வு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் இப்போது பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ரஷ்ய அதிபருக்குச் சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆதரவில் வளர்ந்த வாக்னர் குழு தற்போது அவரது அரசுக்கு எதிராகவே திரும்பி உள்ளது.

இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு மோதல் தொடங்கி உள்ள நிலையில் வாக்னர் குழுவான கூலிப்படைக்கு பயந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் தனக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றை ரஷ்யா இராணுவம் குண்டு போட்டு அழித்த காட்சிகளும் வெளிவந்திருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.