;
Athirady Tamil News

குருநகரில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!!

0

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் விசேட அதிரடி படையினரால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் ஐந்து மாடி வீட்டு தொகுதிக்கு அருகில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது , 07 கிராம் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் இளைஞனையும் . மீட்கப்பட்ட போதைப்பொருளையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.