;
Athirady Tamil News

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை: கே.எஸ்.அழகிரி!!

0

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை என்றார்.

‘பொறுப்பில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்… தலைவர் பொறுப்பு வேறொருவருக்கு வழங்கப்பட்டாலும் மகிழ்ச்சி தான். யார் தலைவராக இருந்தாலும் 2024 மக்களவை தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம். தமிழக அரசியல் சூழல், அதிமுக- பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தோம்’ என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் இருவரும் டெல்லியில் கட்சி விவகாரங்கள் பற்றி ஆலோசித்து வருவதால் இந்த வார இறுதிக்குள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குறித்து தங்கள் முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.