;
Athirady Tamil News

டெங்குவால் 31 பேர் பலி; அபாய வலயங்கள் அறிவிப்பு !!

0

டெங்கு காய்ச்சல் காரணமாக நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 439 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்டதில் டெங்குக் காய்ச்சலால் இனங்காணப்பட்ட 49,759 பேரில் 24,837 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்வர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 61 MOH பிரிவுகளை டெங்கு அபாயகரமான பகுதிகளாக அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.