;
Athirady Tamil News

பெண்கள், குழந்தைகளின் வீடியோவை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை !!

0

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விஷயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட நபர் கடுமையான தவறு செய்துவிட்டார். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.