;
Athirady Tamil News

அரியானாவில் விவசாயிகளுடன் வயலில் நாற்று நட்ட ராகுல் காந்தி- டிராக்டர் ஓட்டியும் அசத்தினார்!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து இமாசல பிரதேசம் சென்று கொண்டிருந்தார். அரியானா மாநிலத்தில் சென்ற போது அங்கு வயலில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர் காரை நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றார். அவரது வருகையை எதிர்பார்க்காத விவசாயிகள் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடம் ராகுல் காந்தி விவசாயம் மற்றும் விளை பொருட்கள் குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தார்.

திடீரென அவர் தான் அணிந்திருந்த முழுக்கால் பேண்டை முட்டி வரை மடித்து அரைகால் டவுசருடன் வயலில் இறங்கினார். பின்னர் விவசாயிகளுடன் இணைந்து வயலில் நாற்றுகளை நட்டு வைத்தார். வயலில் சிறிது தூரம் டிராக்டர் ஓட்டினார். ராகுல் காந்தியின் இந்த செயலை விவசாயிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதையடுத்து ராகுல் காந்தி விவசாயிகளிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.