;
Athirady Tamil News

கேரளாவில் அமீபாவால் அச்சுறுத்தல்- அபூர்வ மூளை தாக்குதல் நோய்க்கு மேலும் ஒரு சிறுவன் பலி!!

0

கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அமீபாவால் பரவும் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற அபூர்வ நோய் தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தேங்கி நிற்கும் மாசுப்பட்ட தண்ணீரில் இருக்கும் அமீபா தாக்குதலுக்கு உள்ளாபவர்கள் இந்த நோய் தாக்கி பலியாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவைச் சேர்ந்த குருதத் என்ற 15 வயது சிறுவன் இந்த நோய் தாக்கி பலியானான்.

தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்கள் மற்றும் முகம் கழுவுபவர்களின் மூக்கு வழியாக அமீபா சென்று மூளையை தாக்குவதால் அந்த அறிய நோய் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே தேங்கி கிடக்கும் அசுத்தமான நீரில் குளிப்பதையும், முகம் கழுவதையும் தவிர்க்க வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த நிலையில் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற நோய்க்கு மேலும் ஒரு சிறுவனும் பலியாகி உள்ளான்.

காசர்கோடு படனகாடு பகுதியைச் சேர்ந்த பலேஷ்-அஸ்வதி தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒருவனான ஸ்ரீபாலு(3) என்ற சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டுள்ளான். காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவனது உடல்நிலை மோசமானதால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் ஸ்ரீபாலு பரிதாபமாக இறந்தார். அமீபாவால் வரும் அபூர்வ மூளை தாக்குதல் நோய்க்கு மேலும் ஒரு சிறுவன் பலியாகி இருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.