;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றபட்டது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து இன்று அரசியல் சாசன பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதற்கட்டாக வழக்கு தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வது போன்ற நடைமுறைக்கான வழிகாட்டுதல்களை நாளை தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் சஞ்சய் கிஷன், சஞ்ஜீவ் கண்ணா, கவுல் பி.ஆர். கவாய், சுர்ய காந்த் ஆகிய நீதிபகள் இடம் பெற்றுள்ளனர். இந்த பெஞ்ச் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கருத்துக்களை கேட்காமல் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லுமா? இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா? என்பது குறித்து ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ”கடந்த முப்பது வருடங்களாக ஜம்மு-காஷ்மர் பயங்கரவாத தாக்கத்தை எதிர்கொண்டு வந்தது. தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் 370 சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்ததுதான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் வழக்கமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தொழில் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன் இந்த வழக்கை வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மார்ச் 2020-ல் விசாரித்தது. அப்போது ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற மறுத்துவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.