;
Athirady Tamil News

பொலிஸ் நிலையத்துக்குள் பெண் கான்ஸ்டபிள் கைகலப்பு!!

0

பொலிஸ் நிலையத்துக்குள் கைகலப்பில் ஈடுபட்ட பெண் காண்டஸ்டபிள் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட மூவர் அஹங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெண் காண்டஸ்டபிள் தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைக்கு மூவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் கலகம் விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டதுடன், கைகலப்பில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன், காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.