;
Athirady Tamil News

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்!!

0

மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (12) தெரிவித்துள்ளார்.

எனினும், இறக்குமதி தளர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் எப்போது நீக்கப்படும் என்பது குறித்து அவர் தகவல் வெளியிடவில்லை.

எதிர்காலத்தில் கூடுதல் இறக்குமதி தளர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாக அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என்றும், நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.