போர் முடிந்தவுடன் நேட்டோவில் இணையவுள்ள உக்ரைன் !!
நேட்டோவிலுள்ள கூட்டணி நாடுகள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது உக்ரைன் இராணுவக் கூட்டணியில் இணையலாம் என நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி, நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான தாமதத்தை விமர்சித்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேகமாக நகர வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ள நேட்டோ, காலவரையறை தொடர்பில் குறிப்பிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடு லிதுவேனிய தலைநகர் வில்னியஸில் நடைபெறுகிறது.
ரஷ்யாவுடன் போரில் ஈடுபடும் போது உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொள்வதுடன், போர் முடிந்தவுடன் வெகுவிரைவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.