நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரம்- இருவர் கைது!!
நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சிவகங்கை, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.