;
Athirady Tamil News

மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் பலாலி பொலிஸாரால் ஒருவர் கைது!!

0

இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , நேற்றைய தினம் புதன்கிழமை , தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் , தமக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் ஒருவர் , தம்மை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.