;
Athirady Tamil News

சிசு விவகாரம்: மரபணு சோதனைக்கு ஜோடி மறுப்பு!!

0

உயிரிழந்த சிசுவொன்றின் சடலத்தை தெளிவின்றி வெவ்வேறு பெற்றோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட சம்பவம் ஒன்று கம்பஹா வைத்தியசாலையில் பதிவாகியது.

இது குறித்து உண்மையான பெற்றோரை உறுதி செய்வதற்காக கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் மரபணுப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இருந்தபோதும் மரபணுப் பரிசோதனையை செய்ய குறித்த தம்பதி மறுப்புத் தெரிவித்ததாகவும் இந் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் பரிசோதனை மேற்கொள்ளவிருந்த வைத்தியருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.