;
Athirady Tamil News

உக்ரைன் அதிபரை கண்டு கொள்ளாத உலகத் தலைவர்கள்!!

0

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

லிதுவேனியாவின் வில்னியஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்க, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டும் தோய்ந்த முகத்தில் தனியாக நின்றிருக்கிறார்.

கண்டு கொள்ளாத உலக தலைவர்கள்

உக்ரைன் நேட்டோவில் இணைவது தொடர்பான முடிவிற்கு மத்தியில் நடைபெற்ற சமூக விருந்தின் போது, ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என அந்த புகைப்படம் தொடர்பில் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஜெலன்ஸ்கி வருகையை அங்குள்ள தலைவர்கள் விரும்பவில்லை எனவும், நேட்டோவை நிலையற்ற கூட்டணி என ஜெலன்ஸ்கி கூறியது அமெரிக்காவை கோபப்படுத்தி விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அதிபரின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கி தனது கணவரிடமிருந்து சில அடி தூரத்தில் ஒரு பெண் தலைவர் ஒருவருடன் உரையாடுவதை புகைப்படத்தில் காண முடிகிறது. அந்த நேரத்தில் தான், ஜெலன்ஸ்கி தனியாக நின்றிருப்பது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.