;
Athirady Tamil News

நிதி ஒழுக்கம் இன்றியமையாதது: ஜனாதிபதி !!

0

நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய வருமான மார்க்கங்களை உருவாக்குவதற்கான உத்திகளைக் கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.