;
Athirady Tamil News

உத்தரகாண்டில் கிராம மக்களுக்கு விருந்து கொடுத்த யூடியூபர்!!

0

உத்தரகாண்டை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் அஸ்வினி தாபா. இவரது வீடியோக்கள் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும். இந்நிலையில் இவர் அங்குள்ள புரான்ஸ் கந்தா என்ற கிராமத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். எனவே கிராம மக்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்த அஸ்வினி தாபா அப்பகுதியில் பிரபலமான கொழுக்கட்டை வடிவிலான சிற்றுண்டி வகையை சேர்ந்த ‘மோமோ’ விருந்து கொடுத்தார்.

மேலும் கிராம மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.