;
Athirady Tamil News

இலங்கையின் சுகாதாரத்துறை மாபியாவாகியுள்ளது !!

0

ஆசியாவில் சிறந்த சுகாதார வசதிகள் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. ஆனால் இன்று இலங்கை வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. சுகாதாரத்துறை என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது. இந்த மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றன என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசியாவின் சிறந்த சுகாதார வசதிகள் உள்ள நாடு இலங்கை என அந்தக் காலத்தில் பெருமையாக பேசிக்கொண்டோம். ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. மருந்து வில்லைகளை பாவிப்பதற்கு கெனூலா ஏற்றிக்கொள்வதற்கு பயமாகவுள்ளது. ஏனென்றால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தான் இன்றைய நாட்டின் நிலைமையாகும். சுகாதார அமைச்சு என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியா என்பது அறிந்த ஒன்றாகும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளில் மாபியா உள்ளது. இலங்கைக்கு மருந்துகளை கொண்டு வரும் மாபியாக்கள் மில்லியன் பில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டுகின்றன. அதற்காக தான் இன்று இவ்வளவு முரண்பட்டு சண்டை போடுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.