;
Athirady Tamil News

உக்ரைனுக்கு வந்த மகிழ்ச்சி தகவல் – நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி !!

0

அமெரிக்க செனட்டர்கள் நேட்டோவுடன் இணைவதற்கான ஆதரவினை கோரி வரும் நிலையில் உக்ரைனுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது.இதற்காக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க செனட்டர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

அதாவது, அமெரிக்க செனட்டர்கள் லிண்ட்ஸே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் ப்ளூமெந்தல் ஆகியோர் நேட்டோ தொடர்பில் ஆதரவு வரைவு தீர்மானத்தை முன்வைத்ததற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

‘அமெரிக்காவில் இருந்து ஒரு முக்கிய செய்தி. செனட்டர்கள் லிண்ட்ஸே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் ப்ளூமெந்தல் ஆகியோர், உக்ரைனின் ஆரம்பகால நேட்டோ அணுகல் ஆதரிக்கும் அமெரிக்க செனட்டின் வரைவு தீர்மானத்தை வழங்கியுள்ளனர்.

உண்மையில், இது மட்டுமே உக்ரைனையும் நமது முழு ஐரோப்பாவையும், நமது ஜனநாயகத்தையும் புதிய ரஷ்ய ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுதலையையும் நம்பத் தகுந்த வகையில் பாதுகாக்க முடியும்.

நிரந்தரமான அமைதியை நெருக்கமாகக் கொண்டுவர எங்களுக்கு உதவிய அனைவருக்கும், செனட்டர்களுக்கும் நன்றி! உக்ரைனுக்கு உங்கள் முக்கிய ஆதரவிற்கு அனைத்து அமெரிக்கர்களுக்கும் நன்றி! என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.