;
Athirady Tamil News

எனது மகளுக்கு மனநல பாதிப்பு இருந்தது- முகநூல் நண்பரை பார்க்க பாகிஸ்தான் சென்ற பெண்ணின் தந்தை பேட்டி!!

0

உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (29) என்ற வாலிபருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அஞ்சு குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் முகநூல் நண்பரை பார்க்க முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்று விட்டார்.

இதனால் அவரது கணவர் அரவிந்த்குமார் மற்றும் குழந்தைகள் அஞ்சு எப்போது வருவார் என தெரியாமல் தவிப்புடன் காத்திருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் நஸ்ருல்லாவிடம் விசாரித்தனர். அப்போது அவர், அஞ்சுவை மணக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் ஒரு மாத கால விசா முடிந்ததும் அவர் இந்தியா திரும்பி விடுவார் என கூறியுள்ளார். இந்நிலையில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூர் நகரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு. அவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தான் சென்றாள் என்பது எனக்கு தெரியாது. அஞ்சு 3 வயதில் இருந்தே உத்தரபிரேதசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் அவரது தாய்மாமாவுடன்தான் தங்கி இருந்தார். அவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது. இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தார். எனவே நான் அவளை கண்டுகொள்வது கிடையாது. அதன் பின்னர் அஞ்சுவுக்கு திருமணம் நடந்ததை அறிந்தேன். எனது மருமகன் மிகவும் எளிமையான நபர். ஆனால் அஞ்சு விசித்திரமானவள். அவள் மன உளைச்சலில் இருக்கிறாள் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.