;
Athirady Tamil News

லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியர்- மத்திய பிரதேசத்தில் சோதனையின் போது பரபரப்பு!!

0

மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை. இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கையும் , களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். சம்பவத்தன்று வருவாய் துறை அலுவலகத்துக்கு சென்ற சந்தன்சிங், பத்வாரி கஜேந்திர சிங்கிடம் ரூ. 4.500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.

போலீசாரை பார்த்ததும் பத்வாரி கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். எங்கே தான் ஆதாரத்துடன் சிக்கி கொள்வோமோ என பயந்த அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர். அதில் அவர் விழுங்கிய பணம் கூழாகி வெளியில் வந்தது. பின்னர் அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.