;
Athirady Tamil News

தாயின் கணவரால் சிறுமி துஸ்பிரயோகம்!!

0

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவமொன்று கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல் கணவரின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாவது கணவருடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் ​​​விசாரணைளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.