;
Athirady Tamil News

கனடாவில் கோர விபத்து – நேருக்கு நேர் மோதிக்கொண்ட நான்கு வாகனங்கள் !!

0

கனடாவில் நியூபிரவுன்ஸ்வீக்கின் ஜெம்செக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகன விபத்து காரணமாக குறித்த பகுதியின் அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.

டிராக்டர் ட்ரெய்ல, பாக்ஸ் ட்ரக், மினி வான் மற்றும் பிக்கப் ட்ரக் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 55 வயதான பெண், ஒருவரும் 54 வயதான ஆண் ஒருவரும் 32 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயம் அடைந்து ஏனைய இருவரின் நிலைமை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.