;
Athirady Tamil News

கைரேகை இயந்திரம் கட்டாயம்!!

0

மேலதிக கொடுப்பனவுகளைப் பெறும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் தமது நாளாந்த வருகை மற்றும் வெளியேறுகையை பதிவு செய்வதற்கு கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இது அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.