;
Athirady Tamil News

மீண்டும் மெகா பொலிஸ் !!

0

மெகா பொலிஸ் அல்லது நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த செயல் திட்டமும் வழிகாட்டுதல்களும் சிங்கப்பூர் நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்படும்.

2015 இல் மெகா பொலிஸ் அல்லது நகராட்சி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதன் கீழ் கொழும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு மேல்மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்தை மையமாக கொண்டு கிழக்கு மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மெகா பொலிஸ் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.