;
Athirady Tamil News

ரஷ்ய படைகளுக்கு ஒரேநாளில் ஏற்பட்ட மற்றுமொரு பேரிழப்பு !!

0

உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படையினருக்கு எதிரான தாக்குதலில் ஒரே நாளில் பாரிய இழப்பை சந்தித்துள்ளது ரஷ்ய இராணுவம்.

நேற்று (27) உக்ரைன் படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 560 ரஷ்ய வீரர்களைக் கொன்றதுடன் 4 டாங்கிகள், 14 கவச வாகனங்கள், 30 பீரங்கி அமைப்புகள் மற்றும் 11 ட்ரோன்களை அழித்துள்ளன.

இதேவேளை இன்று(28 )வரை ரஷ்யாவின் 4000 ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

24 பெப்ரவரி 2022 முதல் ஜூலை 28, 2023 வரையிலான ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளது [அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் சமீபத்திய இழப்புகளைக் குறிக்கின்றன ]

தோராயமாக 244,830 (+560) ராணுவ வீரர்கள்

4,190 (+4) டாங்கிகள்

8,161 (+14) கவச போர் வாகனங்கள்;

4,775 (+30) பீரங்கி அமைப்புகள்;

698 (+0) பல் குழல் ரொக்கட் பீரங்கிகள்

458 (+1) வான் பாதுகாப்பு அமைப்புகள்;

315 (+0) நிலையான இறக்கை விமானம்;

311 (+0) ஹெலிகொப்டர்கள்;

4,007 (+11) யுஏவிகள்;

1,347 (+0) கப்பல் ஏவுகணைகள்;

18 (+0) கப்பல்கள்/படகுகள்;

7,240 (+11) வாகனங்கள் மற்றும் டாங்கர்கள்;

709 (+1) சிறப்பு வாகனங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.