;
Athirady Tamil News

“ஜி-20” மாநாடு- வெளிநாட்டு அமைச்களுடன் மாமல்லபுரம் வந்த மத்திய அமைச்சர்!!

0

“ஜி-20” மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 34 வெளிநாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மொத்தம் 107பேர், 4சொகுசு பஸ்களில் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரம் வந்தனர். தமிழக சுற்றுலாத்துறை, மத்திய தொல்லியல்துறை சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட உள்ள பகுதிகள், பாதுகாப்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி ஏற்பாடு பகுதிகளை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகளுக்கு மாலை 5மணியில் இருந்து கடற்கரை கோவில், அர்சுன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை அனுமதிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.