;
Athirady Tamil News

தக்காளி விலை உயர்வால் கண்ணீர் விட்டு அழுத காய்கறி வியாபாரி- ராகுல் காந்தி பகிர்ந்த வீடியோ!!

0

நாட்டின் பல மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் 1 கிலோ தக்காளி ரூ.200-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மொத்த விற்பனை சந்தையில் காய்கறி விலை அதிகமாக இருப்பதை அறிந்த வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில், ஜஹாங்கீர்பூர் பகுதியை சேர்ந்த ராமேஸ்வர் என்ற வியாபாரி தனது மகனுடன் சந்தைக்கு காய்கறி வாங்க வந்ததாகவும், அப்போது தக்காளி விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவ்வளவு விலைக்கு தக்காளி வாங்கி நாங்கள் எப்படி விற்க முடியும் என்பது கூட எங்களுக்கு தெரிய வில்லை என அந்த வியாபாரி கண்ணீர் வடிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஒரு புறம் அதிகாரத்தை பாதுகாக்க சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் அறிவுரைப்படி நாட்டின் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.

மறுபுறம் சாதாரண இந்தியர்களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கைக்கு எட்டவில்லை. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இந்த இடைவெளியை நிரப்பி கண்ணீரை துடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.