;
Athirady Tamil News

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்த குற்றத்தில் ஒருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில் , பிள்ளையார் கோவில் , வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் , சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டு உள்ளதாகவும் , குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.