;
Athirady Tamil News

கொக்குவிலில் முதியவரின் சடலம் மீட்பு!!

0

யாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் வழமையான அவருடைய நடமாட்டம் இல்லாத நிலையில், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.