;
Athirady Tamil News

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்!!

0

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை தளத்திறகு பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்த ரஸ்யாவின் போர்க்கப்பல்கள் கண்டு அவற்றை அழித்துள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சேதங்கள் குறித்து எதனையும்தெரிவிக்காத அதேவேளை தரையிறங்கும் கப்பல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது செயற்படமுடியாத நிலையில் உள்ளது என ரொய்ட்டருக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.