;
Athirady Tamil News

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கமின் நினைவஞ்சலிக் கூட்டம்!!

0

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது இளநிலை சட்டத்தரணிகளினால் ஒழங்கமைக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக் கிழமை (ஓகஸ்ட் 6) பிற்பகல் 3 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள யூஎஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உப தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்துறையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து இந்த நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.