;
Athirady Tamil News

கோவையில் 2002-ல் குண்டு வைத்த வழக்கு: தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க மனைவியிடம் விசாரிக்க திட்டம்!!

0

கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதானி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து கடந்த 2002-ம் ஆண்டு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் குண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த குண்டு வெடிக்கும் முன் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வெடி குண்டை வைத்தது, கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த முகம்மது சதீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது சதீர் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக தலைமறைவாகவே உள்ளார்.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு முகம்மது சதீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வந்தது. மேலும் முகமது சதீருடன், அவரது மனைவியும், சேர்ந்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் புதுடெல்லி, ஐதராபாத், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்ததும், அங்கு இதுபோன்று ஆட்களை சேர்த்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரிப்பதற்காகவும், முகமது சதீர் எங்கே இருக்கிறார் என்பதை அறியவும், அவரது மனைவியான பவுசியாவிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது பவுசியா 2-வது திருமணம் செய்து கொண்டு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ளார். அங்கு சென்று அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் கூறுகையில், 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முகம்மது சதீரை எங்கு இருக்கிறார் என்பதை அறிய அவரது மனைவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.