;
Athirady Tamil News

சுதந்திர தினத்தை ஒட்டி தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்: பஞ்சாபில் 5 பேர் அதிரடி கைது!!

0

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதலோ, நாசவேலைகளோ நடைபெறாமல் இருக்க ராணுவமும், அனைத்து மாநில காவல்துறையினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். தேச எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. “மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.

பயங்கரவாதிகளாக கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் ரிண்டா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்களாக இந்த 5 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் இலக்கு வைத்து கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம்” என இந்த நடவடிக்கை குறித்து பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று பஞ்சாபின் டர்ன் டரன் பகுதியில் தீவிரவாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.